இந்தத் தளத்தைப் பற்றி

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் பெரும் இலக்கிய ஆக்கம். ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்களின் வரிசை. ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள் தொடர்ந்து எழுதி உருவாகி வரும் காவியம்.

வெண்முரசை தொடரும் வாசகர்களுக்கு உதவியாக இந்த நூற்களஞ்சியம் உருவாக்கப்படுகிறது. நூலில் வரும் ஆயிரக்கணக்கான பாத்திரங்கள், வம்சங்கள், உறவுமுறைகள், இடங்கள், நிகழ்வுகள் போன்றவையும் மற்ற பல அரிய தகவல்களும் இந்தக் களஞ்சியத்தில் பல்வேறு தலைப்புகளிலும் அகரவரிசைகளிலும் தொகுக்கப்படும்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License